பங்களிப்பு அனுப்பும்போது

ஒவ்வொரு ஊழியர்களுக்குமான பங்களிப்பினைச் செலுத்துவதற்கு தொழில்தருநர் பொறுப்புடையவராவர்.

වவிசேடகுறிப்பு: பங்களிப்புக்களைச் செலுத்துவதற்கு ஊழியர்கள் விரும்பவில்லையெனக் காரணம் காட்டுவதன் மூலம் இப்பொறுப்பிலிருந்து தொழில்தருநர்களுக்கு மன்னிப்பளிக்கப்படமாட்டாது.

உறுப்பினர் பங்களிப்புக்களையும் உறுப்பினர் பங்களிப்பு விபரங்களையும் அனுப்பும் பொழுது பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள்

  1. ஊழியர்களுக்கான ஊ.சே. நிதிய உறுப்பினர் இலக்கங்களை எண்ணியல் ஒழுங்கில் ஒதுக்குதல். கடந்த காலத்தில் இன்னொரு உறுப்பினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட குறிப்பிட்ட இலக்கத்தினை புதிய உறுப்பினருக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் வழங்கக்கூடாது./
  2. இலங்கை ஊழியரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை உள்ளடக்குதல்.
  3. ஒவ்வொரு ஊழியருக்குமான பங்களிப்பினை கீழே குறிப்பிடப்பட்டவாறு கணக்கிடல்.
    மொத்தப் பங்களிப்பினைக் கணக்கிடல்
    ஊழியரின் பங்களிப்பு மொத்த மாதாந்த வருவாயில் 8 சதவீதம் (ஊழியரின் சம்பளம்/ கூலியிருந்து கழிக்கப்படல் வேண்டும்)
    தொழில்தருநரின் பங்களிப்பு ஊழியரின் மொத்த மாதாந்த வருமானத்தில் 12 சதவீதத்திற்குச் சமமானதொரு தொகை (தொழில்தருநரினால் மொத்தமாகச் செலுத்தப்படல் வேண்டும்)
    ஊழியர் ஒருவருக்கான மொத்தப் பங்களிப்பு ஊழியரின் மொத்த மாதாந்த வருவாயில் 20 சதவீதம் (கீழே வரைவிலக்கணம் செய்யப்பட்டவாறு)
    ஊழியர் ஒருவருக்கான மொத்த வருவாய்கள்

    மொத்த வருவாய்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்:

    • சம்பளங்கள், கூலிகள் அல்லது கட்டணங்கள்
    • வாழ்க்கைச் செலவுப் படிகள்> விசேட வாழ்க்கைப் படிகள் மற்றும் ஏனைய அதையொத்த படிகள்
    • விடுமுறை நாட்கள் தொடர்பான கொடுப்பனவுகள்
    • ஊழியருக்கு தொழில்தருநரினால் வழங்கப்படுகின்ற சமைத்த அல்லது சமைக்காத உணவின் காசுப் பெறுமதி (அத்தகைய பெறுமதி இறுதியாக தொழில் ஆணையாளரினால் தீர்மானிக்கப்படுகிறது)
    • உணவுப் படிகள்
    • குறித்துரைக்கப்படக்கூடிய வேறு ஏதேனும் வகையான ஊதியங்கள்
    • கழிவுகள் (தரகுகள்), துண்டு அடிப்படையிலான கொடுப்பனவுகள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான கொடுப்பனவுகள் என்பனவற்றின் வடிவிலமைந்த கொடுப்பனவுகள்;
  4. ஊ.சே. நிதியத்தின் மொத்தத் தொகையும் (20 சதவீதம்) ஊ.சே.நிதியக் கண்காணிப்பாளர், ஊ.சே. நிதியத் திணைக்களம், இல. 13, சேர் பாரேன் ஜயதிலக்க மாவத்தை, கொழும்பு 01 அல்லது அஞ்சல் பெட்டி 1299,கொழும்பு, இலங்கை என்ற முகவரிக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
  5. குறிப்பிட்ட மாதம் தொடர்பான ஊ.சே. நிதியப் பங்களிப்புக்கள் அடுத்துவரும் மாதத்தின் இறுதி வேலை நாளன்று அல்லது அதற்கு முன்னதாக ஊ.சே.நிதியத்தினால் பெறப்படல் வேண்டும். இல்லையெனில்,தாமதத்திற்கேற்ப தொழில்தருநருக்கெதிராக மேலதிகக் கட்டணம் விதிக்கப்படும்..
  6. பங்களிப்புக் கொடுப்பனவுகளுடன் உறுப்பினரின் பங்களிப்பு விபரங்களும் சேர்த்து அனுப்பப்படுதல் வேண்டும்.
  7. கொடுப்பனவு மாதிரி மற்றும் உறுப்பினரின் பங்களிப்பு விபரங்களை அனுப்பி வைக்கின்ற முறை :
    • 2012ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க ஊ.சே. நிதியச் சட்டத்தின்படி குறைந்தபட்சம் 50 ஊழியர்களைக் கொண்டுள்ள அனைத்துத் தொழில்தருநர்களும் அவர்களது ஊழியர்களின் ஊ.சே. நிதியத் திரட்டுக்களை (ஊழியர் பங்களிப்பு விபர அறிக்கை) மாதாந்த அடிப்படையில் இலத்திரனியல் ஊடகமூடாகச் சமர்ப்பித்தல் வேண்டும்.
    • இதன்படி, எஞ்சிய தொழில்தருநர்கள் “C” படிவமூடாக காகிதாதிகளை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைச் சமர்ப்பிப்பதனை தொடர்ந்தும் மேற்கொள்ளலாம்.
    • எனினும், பங்களிப்பு விபரங்களை இலத்திரனியல் ரீதியாக வழங்குவதும் தொடர்பான கொடுப்பனவுகளை இணையவழியில் மேற்கொள்வதும் (50இற்குக் குறைவான ஊழியர்களைக் கொண்டுள்ள தொழில்தருநர்கள் கூட) விதந்துரைக்கப்படுகிறது. இது ஊ.சே.நிதிய அனைத்து ஆர்வலர்களுக்கும் அதிகளவு நன்மைகளைக் கொண்டுவரும்.
நிகழ்நிலை சமர்ப்பிப்பு (இலத்திரனியலூடாக நிரப்புதல்)
1.1. இ-கூற்று முறைமை

இ-திரட்டு முறைமையூடாக பங்களிப்பினைச் செலுத்துவதற்காகப் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும்:

  1. இ-திரட்டு முறைமையின் கீழ், ஊ.சே. நிதியத்தினால் வழங்கப்பட்ட பதிவுசெய்தல் படிவத்தினை இணைப்பு ஊ.சே.நிதியத்திற்கு நேரடியாகச் சமர்ப்பிப்பதன் மூலமும் அல்லது ஊ.சே. நிதியப் பங்களிப்புக்களின் கொடுப்பனவிற்கு வசதியளிக்கின்ற இலங்கையிலுள்ள உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கூடாகச் சமர்ப்பிப்பதன் மூலமும் பதிவுசெய்யலாம் என்பதுடன் ஊ.சே.நிதியக் கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கான இணையவழி வங்கித்தொழில் முறைமையூடாகப் பங்களிப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதன் மூலமும் பதிவுசெய்யலாம்.
    இணைப்பு

  2. தேசிய அடையாள அட்டையில் காணப்படுகின்றவாறு ஊழியர்களின் விபரங்களை ஊ.சே.நிதியத்தில் பதிவுசெய்தல்.
  3. பின்வரும் உரைக்கோப்பினை ஊ.சே.நிதியம்/ உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட படிவங்களுக்கிணங்க தயாரித்தல்.
    1. இது அவர்களின் இணையவழி வங்கித்தொழில் வசதியூடாக ஊ.சே.நிதியத்தினைக் கொடுப்பனவு செய்கின்ற வாடிக்கையாளர்களுக்கு வசதியளிக்கிறது.
      பங்களிப்பு விபரக் கோப்பு

    2. இக்கோப்பு ஊழியர்களின் விபரங்களையும் அவர்களின் மாதாந்த பங்களிப்புக்களையும் தருகின்றது. இலங்கை ஊழியர்களின் அனைத்து விபரங்களும் அவர்களது தேசிய அடையாள அட்டையிலுள்ளவாறு அல்லது வெளிநாட்டவராக இருக்குமிடத்து கடவுச்சீட்டு விபரங்களின்படி சரியாக நிரப்பப்படுதல் வேண்டும்.
      கொடுப்பனவு தொகுப்புக் கோப்பு

      இக்கோப்பானது, தொடர்பான பங்களிப்பு விபரக்கோப்பில் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்காகச் செலுத்தப்பட்ட மாதாந்த பங்களிப்புக்களின் விபரங்களைத் தருகிறது.

  4. தயாரிக்கப்பட்ட உரைக்கோப்புக்களின் துல்லியத்தன்மையினை ஊ.சே.நிதியத்திற்குச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஊ.சே.நிதியம்/ உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடன் பரிசோதித்துக் கொள்ளவும்.
  5. பின்வரும் வழிகளிலொன்றினூடாக இ-திரட்டுக்களை (உரைக் கோப்புக்கள்) சமர்ப்பிக்கவும்.
    1. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் இணையவழி வங்கித்தொழில் முறைமைகள்

      වஉரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் இணையவழி வங்கித்தொழில் முறைமைகளூடாக பங்களிப்பு விபரங்களைச் சமர்ப்பிக்கவும். தற்பொழுது இவ்வசதி பின்வருவனவற்றுடன் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

      • இலங்கை வங்கி – i-நெற் முறைமை
      • கொமர்~ல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி – கொம்பாங்க் பே மாஸ்டர் முறைமை
      • டிஎவ்சிசி வங்கி – டிஎவ்சிசியின் ஊ.சே.நிதிய முறைமை
      • அட்டன் நசனல் பாங்க் பிஎல்சி – பேபாஸ்ட் முறைமை
      • என்டிபீ வங்கி – என்டிபீ ஊ.சே.நிதிய முறைமை
      • மக்கள் வங்கி – ஊ.சே.நிதிய நெட் முறைமை
      • சம்பத் பாங்க் பிஎல்சி – வி~;வா கோப்பிரேட் முறைமை
      • செலான் வங்கி – செலான் வங்கி ஊ.சே.நிதிய முறைமை
    2. மின்னஞ்சல் முறைமை

      பங்களிப்பு மற்றும் கொடுப்பனவு விபரங்களை epfc3@cbsl.lk ஊடாக ஊ.சே.நிதியத்திற்குச் சமர்ப்பிக்கவும்.

  6. ஊ.சே. நிதியத்திற்கான மாதாந்த பங்களிப்புக்களைப் பின்வரும் முறைகளிலொன்றினூடாக அனுப்பி வைக்கவும்.
    1. இணையவழிக் கொடுப்பனவு

      இவ்வசதி (vi-அ)இன் கீழ் குறித்துரைக்கப்பட்ட உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் இணையவழி வங்கித்தொழில் வசதிகளூடாக இ-திரட்டல்களைச் சமர்ப்பிக்கின்ற தொழில்தருநர்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது. தொடர்பான பங்களிப்பு விபரக்கோப்புக்களை முறைமைகளுக்கு வெற்றிகரமாக தரவேற்றம் செய்த பின்னர் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் இணையவழி வங்கித்தொழில் வசதிகளூடாக ஊ.சே. நிதியப் பங்களிப்புக்களை நேரடியாகச் செலுத்துவதற்கு தொழில்தருநர்களுக்கு வசதியளிக்கப்படுகிறது.

    2. நேரடிப் பற்று

      தொழில்தருநரின் வங்கியினால் உறுதிப்படுத்தப்பட்ட நேரடி பற்று உறுதிப்படுத்தல் படிவத்தினை ஊ.சே.நிதியத்திற்குச் சமர்ப்பித்தல் வேண்டும். இது தொழில்தருநரின் வங்கியிலிருந்து ஒவ்வொரு மாத இறுதியிலும் தொடர்பான நிதிகளைக் கோருவதற்கு ஊ.சே. நிதியத்திற்கு அதிகாரமளிக்கிறது. பங்களிப்பு விபரங்கள் மற்றும் கொடுப்பனவு விபரங்கள் இரண்டினையும் கொண்ட கோப்புக்கள் மாதத்தின் இறுதி வேலைநாளுக்கு முன்னதாக குறைந்தபட்சம் ஐந்து வேலைநாட்களுக்குள் மின்னஞ்சலூடாக ஊ.சே.நிதியத்திற்குச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். தொழில்தருநர் மாதத்தின் இறுதி வேலை நாளன்று பங்களிப்பு விபரக்கோப்பிலுள்ள நிதித் தொகையினைக் கோருவதற்கு ஊ.சே.நிதியத்தினை இயலுமைப்படுத்துகின்ற விதத்தில் அவர்களது வங்கிக் கணக்கில் போதுமான நிதியினை வைத்திருப்பதனை உறுதிப்படுத்தல் வேண்டும்.
      நேரடி பற்று உறுதிப்படுத்தல் படிவத்தினை

      (இவ்வசதி 50 இற்கு மேற்பட்ட ஊழியர்களைத் தமது நிறுவனத்தில் கொண்டுள்ள தொழில்தருநர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்பதனைத் தயவுசெய்து கவனிக்கவும்)

1.2. ஊ.சே.நி உங்கள் விரல் நுனிகளில்

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிய (ஊ.சே.நி) திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.epf.lk, தற்போது தொழில்தருநர்கள் மற்றும் உறுப்பினர்களுக்காக அர்ப்பணிப்பான பல்வேறு சேவைகள் மற்றும் வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் ஒரு காகிதவடிவிலான “சீ படிவம்” சமர்ப்பிக்கும் தொழில்தருநராயின்,
இப்போது, நீங்கள், உங்களுடைய காகிதவடிவிலான சீ- படிவங்களுக்குப் பதிலாக இலத்திரனியல் சீ- படிவங்களை உங்களது கணணிகளில் தயாரித்து நிகழ்நிலை ஊடாக சமர்ப்பிக்க முடியும். சம்பந்தப்பட்ட ஊ.சே.நி பங்களிப்புக்கள் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கொமர்ஸல் வங்கி மற்றும் நேஷன்ஸ் ரஸ்ட் வங்கி ஆகியவற்றின் நிகழ்நிலை தளங்களுடாகவோ அல்லது மக்கள் வங்கியின் ஏதாவது ஒரு கிளையினூடாக காசோலை ஒன்றினை வைப்பிலிடுவதன் மூலமோ செலுத்த முடியும்.

நீங்கள் ஊ.சே.நி நிகழ்நிலை சேவைகளில் பதிவுசெய்து கொள்வதன் மூலம் உங்களுக்கு கிடைக்கக் கூடியவை,

  • காகித வடிவிலான சீ படிவங்களுக்கு பதிலாக ‘இலத்திரனியல் சீ படிவம் சமர்ப்பிக்கும் வசதி.
  • கொடுப்பனவுகளை நிகழ்நிலை வங்கி கணக்குகள் அல்லது காசோலைகள் ஊடாக மேற்கொள்ளும் வசதி.
  • ஊ.சே.நிதிய தொழினுட்ப முறைமையினூடாக உடனடியாக உங்களுடைய இலத்திரனியல் சீ படிவத்திலுள்ள உறுப்பினர் விபரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்துக்கொள்ளக்கூடிய வசதி.
  • கொடுப்பனவு வெற்றிகரமாக நிறைவடைந்து ஊ.சே.நி திணைக்களம் சரிபார்த்தவுடன் கொடுப்பனவு பற்றுச்சீட்டுக்களைப் பிரதிசெய்ய முடிதல்.
  • கொடுப்பனவு நிறைவடைந்து ஊ.சே.நி திணைக்களம் சரிபார்த்தவுடன் அதே நாளுக்குள் உறுப்பினர்களுக்கான ஊ.சே.நி பங்களிப்புக்களை உறுப்பினர் கணக்குகளிற்கு வரவு வைப்பதற்கான வசதி.
  • ஊ.சே.நி தொழினுட்ப முறைமையில் காணப்படுகின்ற உறுப்பினர் விபரங்களைப் பார்க்கக் கூடியதாகவும் தேவைப்பட்டால் திருத்த நடைமுறைகளைத் துரிதப்படுத்தக் கூடியதாகவும் இருத்தல்.
  • நிறுவனத்தினுடைய பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியின் ஊடாக விரைவாகவும் இலகுவாகவும் ஊ.சே.நி திணைக்களத்துடன் தொடர்புகொள்ள முடிதல்.

இதேபோல், நீங்கள் ஒரு ‘இலத்திரனியல் மீளளிப்பு’ வழங்கும் தொழில்தருநர், ஆனால் இப்போதும் நேரடி வைப்புக்கள் அல்லது காசோலைகள் மூலம் கொடுப்பனவு செய்பவராயின், நீங்களும் ஊ.சே.நி நிகழ்நிலை சேவைகளுக்காக எங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம்.
ஊ.சே.நி நிகழ்நிலை சேவைகளில் பதிவுசெய்துகொள்வதற்கு,
எங்களுடைய இணையத்தளத்திற்கு www.epf.lk வருகைதந்து, தொழில்தருநர்களுடன் சம்பந்தப்பட்ட படிவங்களிலிருந்து பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தினை பெற்று பூர்த்தி செய்துகொள்ள முடியும். முறையாக நிரப்பப்பட்ட பதிவுப் படிவம் மற்றும் தேவையான துணை ஆவணங்கள், help.epfonline@cbsl.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும் (வண்ண வருடல் பிரதியாக) அல்லது கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும் அல்லது அதே கட்டடத்திலுள்ள மக்கள் தொடர்புகள் மற்றும் விசாரணைகள் கருமபீடத்தில் கையளிக்க முடியும்.

எங்களுடைய இணையத்தளத்திற்கு www.epf.lk, வருகைதந்து, தொழில்தருநர்களுடன் சம்பந்தப்பட்ட படிவங்களிலிருந்து பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தினை . பெற்று பூர்த்தி செய்துகொள்ள முடியும். முறையாக நிரப்பப்பட்ட பதிவுப் படிவம் மற்றும் தேவையான துணை ஆவணங்கள். help.epfonline@cbsl.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும் (வண்ண வருடல் பிரதியாக) அல்லது கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும் அல்லது அதே கட்டடத்திலுள்ள மக்கள் தொடர்புகள் மற்றும் விசாரணைகள் கருமபீடத்தில் கையளிக்க முடியும்.

விசாரணைகள் அல்லது உதவிகளுக்கு,

தொடர்பு கொள்க:, 011-2477022, 011-2477050, 011-2477213, 011-2477475
மின்னஞ்சல் : help.epfonline@cbsl.lk.
கண்காணிப்பாளர்,
ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களம்,,
இலங்கை மத்திய வங்கி,
வைற்வேய்ஸ் கட்டடம்,
இல 25. சேர். பரோன் ஐயதிலக மாவத்த,
கொழும்பு 01.

காகிதங்களை அடிப்படையாகக் கொண்டு சமர்ப்பித்தல் (கைகளினால் செய்யப்படும் முறைமை)
    1. 50 இற்கும் குறைவான ஊழியர்களைக் கொண்டிருக்கும் தொழில்தருநர்கள் அனைத்து ஊழியர்களுக்குமான முதல் பங்களிப்பினை “C” படிவத்தினை மூன்று பிரதிகளில் நிரப்பி அத்துடன் சேர்த்து அனுப்புதல் வேண்டும். இதனை அண்மையிலுள்ள தொழில் திணைக்களத்திலிருந்து (கட்டணமின்றி) பெற்றுக்கொள்ள முடியும் அல்லது ஊ.சே. நிதிய வெப்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
      படிவம் “C”

    2. ஏற்கனவே அச்சிடப்பட்ட “C” படிவத்தினைப் பயன்படுத்துதல். இது பங்களிப்பு விபரங்களை அனுப்புவதற்காக மாதாந்த அடிப்படையில் தொழில்தருநர்களுக்கு ஊ.சே. நிதியத்தினால் அனுப்பி வைக்கப்படுகிறது.
      • புதிய உறுப்பினரொருவர் ஆட்சேர்ப்புச் செய்யப்படும் பொழுது உறுப்பினரின் விபரங்கள் குறிப்பிட்ட மாதத்தின் “C” படிவத்தில் உள்ளடக்கப்படுதல் வேண்டும். உறுப்பினரின் விபரங்கள் புதிய உறுப்பினரின் தேசிய அடையாள அட்டைக்கிணங்க சரியான முறையில் நிரப்பப்படுதல் வேண்டும். (“C”படிவத்தின் மூலப்பிரதி ஊ.சே. நிதியத் திணைக்களத்திற்கும் இரண்டாவது பிரதி அண்மையிலுள்ள தொழில் திணைக்களத்திற்கும் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். மூன்றாவது பிரதி எதிர்கால உசாவுகைகளுக்காக தொழில்தருநரினால் வைத்திருக்கப்படுதல் வேண்டும்).
    3. பங்களிப்புக்களை பின்வரும் கொடுப்பனவு மாதிரியொன்றினூடாக ஊ.சே. நிதியத்திற்கு அனுப்புதல் வேண்டும்.
      1. காசு அல்லது காசோலை மூலமான ஊ.சே. நிதியப் பணவனுப்பல்கள் மக்கள் வங்கியின் எல்லாக் கிளைகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
        • மக்கள் வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஊ.சே. நிதியக் கொடுப்பனவுக் காசோலைகளை அல்லது காசு வைப்புத் துண்டுகளை முறையாக நிரப்பிக் கொள்ளவும்.
        • ஒவ்வொரு ஊ.சே. நிதியக் கொடுப்பனவு காசோலை/ காசு வைப்பு துண்டுகளை “C” படிவத்துடன் சேர்த்துச் சமர்ப்பித்தல் வேண்டும். இது குறித்துரைக்கப்பட்ட மாதத்திற்காக ஊ.சே. நிதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தொடர்பு இலக்கங்களை உள்ளடக்குகிறது.
        • படிவம் “C” இல் தொழில்தருநரின் முகவரிக்குக் கீழே அச்சிடப்பட்டிருக்கும் தொடர்பு இலக்கம் ஊ.சே. நிதியக் காசோலை/ காசு வைப்புத் துண்டிலுள்ள குறிப்பிட்ட இடத்தில் எழுதப்படுதல் வேண்டும்.
        • தொடர்பு இலக்கம் ஊ.சே. நிதியக் கொடுப்பனவு மற்றும் ஊ.சே. நிதியக் காசோலை/ காசு வைப்புத் துண்டு என்பனவற்றினை உள்ளடக்கிய படிவம் “C” இனை தொழில்தருநர் சரியாக நிரப்பி மக்கள் வங்கிக் கிளையில் சமர்ப்பித்தல் வேண்டும்.
      2. காசோலைகள் மற்றும் வங்கி வரைவுகள் ஊ.சே. நிதியத் திணைக்களத்தின் கண்காணிப்பாளரின் சார்பில் வரையப்படுதல் வேண்டும்.
      3. காசுக் கொடுப்பனவுகளை இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையில் செலுத்த முடியும்.
      4. காசுக் கட்டளைகள் (கொடுப்பனவு அலுவலகம் கொழும்பு எனக் குறிப்பிடப்படுதல் வேண்டும்).
        [மூல படிவம் “C” இனைக் கொடுப்பனவு சாதனங்களுடன் சேர்த்து (காசோலை/ காசுக் கட்டளை/ வங்கி வரைவு/ இலங்கை வங்கியின் காசு வைப்புத் துண்டு) ஊ.சே. நிதியக் கண்காணிப்பாளர், லொயிட்ஸ் கட்டம், இல.13 சேர் பாரேன் ஜயதிலக்க மாவத்தை, கொழும்பு 01 இற்கு அஞ்சல் செய்யவும் அல்லது லொயிட்ஸ் கட்டடத்திலுள்ள ஊ.சே.நிதியத் திணைக்களத்தின் ஆவணச் சேகரிப்புப் பீடத்தில் கையளிக்கவும்].
முக்கியமானவை
      • உறுப்பினர் விபரங்களில் அல்லது கொடுப்பனவில் ஏதேனும் வேறுபாடுகள் காணப்படுமாயின் உறுப்பினர் கணக்கு இற்றைப்படுத்தப்படமாட்டாது என்பதுடன் இது பற்றி தொழில்தருநருக்கு அறிவிக்கப்படும்.
      • பூரணப்படுத்தப்படாத விபரங்களைச் (படிவம் “C உரைக் கோப்புக்கள்) சமர்ப்பித்தமைக்காக மொத்தக் கொடுப்பனவில் 2 சதவீதம் மேலதிகக் கட்டணமாக விதிக்கப்படும்.
      • படிவம் “C” அல்லது உரைக் கோப்பு இல்லாமல் அனுப்பப்பட்ட பங்களிப்புக்கள் உறுப்பினரின் கணக்குகளில் பதிவுசெய்யப்படாது என்பதுடன் அது சிக்கலான தன்மைக்கும் தண்டங்களுக்கும் வழிவகுக்கும்.
      • தொழில்தருநர் உறுப்பினர் கணக்குகளை இற்றைப்படுத்தும் பொருட்டு பின்வரும் நடவடிக்கைகளுக்கு இணங்கிக் கொள்வதன் மூலம் ஊ.சே. நிதியத்திலிருந்து பெறப்பட்ட கடிதங்களுக்குப் பதிலிறுத்தல் வேண்டும்.
        • 2 சதவீத மே லதிகக் கட்டணத்தினைச் செலுத்துவதற்கு
        • பூரணப்படுத்தப்பட்ட படிவம் “C”அல்லது உரைக் கோப்பினை சமர்ப்பிப்பதற்கு
        • குறைக் கொடுப்பனவுகளை கொடுப்பனவு செய்வதற்கு
        • உறுப்பினர் விபரங்களில் காணப்படும் ஏதேனும் குறைபாடுகளை அறிவிப்பதற்கு உறுதியளித்தல்
      • பங்களிப்புக் காலம், கொடுப்பனவுகளின் விபரங்கள் அல்லது தொழில்தருநரின் விபரங்கள் என்பனவற்றில் மாற்றங்களைச் செய்வதற்கு எழுத்து மூலமான கோரிக்கையொன்றினை ஊ.சே. நிதியத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
      • முதல் “C” படிவத்தினை அனுப்புகின்ற நேரத்தில், தொழில் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தொழில்தருநர் பதிவுச் சான்றிதழின் பிரதியொன்றையும் இணைக்குமாறு ஆலோசனை வழங்கப்படுகிறது.
      • “Z” இலக்கங்களை ஒதுக்குகின்ற கடிதமொன்றினைப் பெறும் சந்தர்ப்பத்தில் (தற்காலிக தொழில்தருநர் இலக்கம்) ஊ.சே. நிதியத்திற்குப் பங்களிப்பு விபரங்களுடன் ஊழியர் பதிவுச் சான்றிதழின் பிரதியொன்றினையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.
      • கைகளினால் செய்யப்படும் தரவுப் பதிவுகள் இடர்ப்பாடுகளுக்கு வழிவகுக்குமென்பதனால் அனைத்து நிறுவனங்களும் இலத்திரனியல் ஊடகமூடாக இவற்றை அனுப்பி வைப்பதற்கு ஊக்குவிக்கப்படுகின்றன.
தண்டங்கள் மற்றும் குற்றங்கள்

நடைமுறை மாதத்தின் பங்களிப்பிற்கான கொடுப்பனவு வரவேண்டிய திகதி அடுத்துவரும் மாதத்தின் இறுதி வேலை நாளன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ இருக்கும். இல்லையெனில், தொழில் திணைக்களத்தினால் குறிப்பிடப்பட்ட தாமதத்திற்கிணங்க தொழில்தருநர்களுக்கெதிராக மேலதிகக் கட்டணமொன்று விதிக்கப்படும்.

மேலதிகக் கட்டணம் பின்வருவனவற்றிற்கானதாக இருக்கும்:

      • பங்களிப்புக்களைத் தாமதமாகச் சமர்ப்பித்தல்
      • குறைவான கொடுப்பனவுகளைச் செய்தல்

(செலுத்தப்பட்ட தொகை கணிப்பிடப்பட்ட பங்களிப்பிலும் பார்க்கக் குறைவானதாக இருக்கும் பொழுது மேலதிகக் கட்டணம் குறைக் கொடுப்பனவிலிருந்து முழுக் கொடுப்பனவுகளைச் செய்த நாட்களின் எண்ணிக்கைக்கிணங்க அதிகரிக்கப்படும்)

நிலுவையிலுள்ள கொடுப்பனவுகள் மற்றும் குறைக் கொடுப்பனவுகளுக்கான மேலதிகக் கட்டணம்

ஏற்புடைத்தான மேலதிகக் கட்டண வீதங்கள் கீழே தரப்படுகின்றன:

පதாமதமான காலம் மேலதிகக் கட்டணம்
1 நாளிலிருந்து 10 நாட்கள் வரை 5%
11 நாட்களிலிருந்து 1 மாதம் வரை 15%
1 மாதத்திலிருந்து 3 மாதங்கள் வரை 20%
3 மாதங்களிலிருந்து 6 மாதங்கள் வரை 30%
6 மாதங்களிலிருந்து 12 மாதங்கள் வரை 40%
12 மாதங்களுக்கு மேல் 50%
செலுத்தத் தவறிய தொழில்தருநர்கள் மீதான சட்ட நடவடிக்கை
    • குறைக் கொடுப்பனவுகள் அல்லது பங்களிப்புக்களைச் செலுத்தாதுவிடும் சந்தர்ப்பங்களில் ஊழியர் தொழில் ஆணையாளருக்கு எழுத்து மூலமான முறைப்பாடொன்றினைச் செய்வதற்கான உரிமையினைக் கொண்டிருக்கின்றார். முறைப்பாட்டினைப் பெற்றுக்கொண்டு பொருத்தமான விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் தொழில்தருநருக்கு இது பற்றி அறிவிக்கப்பட்டு கொடுப்பனவுகளைச் செலுத்துமாறு எச்சரிக்கப்படுவார்.
    • தொழில்தருநர் இதற்கு முழுமையாக ஒத்துழைத்து பங்களிப்புக்களைச் செலுத்தாதுவிடின் மூன்று மாத எச்சரிக்கையின் பின்னர் தொழில் திணைக்களம் ஊழியரின் உரிமையினைப் பாதுகாப்பதற்காக தொழில்தருநருக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படும்.